Thursday, 9 August 2012

ஐந்து சிங்கங்கள்

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்துதம் அஞ்சகமே புகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்ஞாது இறைவனை எய்தலும் ஆமே.
- திருமூலர்.

அஞ்சகம் என்பது உடல். அடவி(குகை) என்பது மனம். ஐந்து சிங்கங்கள் என்பவை கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற ஐம்பொறிகளாகும்.

ஒவ்வொரு மனிதனின் மனங்களுக்குள்ளும் ஐந்து சிங்கங்கள் வாழ்கின்றன. காட்டுக்குள் போய் மேய்ந்து விட்டுப்பின் இந்த ஐந்து சிங்கங்களும் தத்தம் மனமாகிய குகைக்குள்ளேயே வந்து தங்கி விடும். இந்த ஐந்து சிங்கங்களின் நகத்தையும், பல்லையும் அறுத்து எறிந்துவிட்டால் அஞ்சாமல் நாம் இறைவனை அடைந்திடலாம்.

ஐம்பொறிகளினால் ஏற்படும் ஆசைகளை நாம் இறைப்பற்றின் மூலம் அறுத்தெறிந்து விட்டால் கலங்காமல் நாம் இறைவனைக் காணலாம்.

No comments:

Post a Comment