Friday, 10 August 2012

இறப்பிற்கு பின்

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டுச்
சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
 - திருமூலர்

(தானம், தவம், தர்மம் செய்யாத) ஒருவர் இறந்த பின்னர், அவரது உறவினரெல்லம் கூடி, அழுதிட்டு, அவரை பிணம் என்று அழைத்து, இடுகாட்டில் வைத்து எரித்து விடுவர். எரிந்த சாம்பலை ஆறிலோ, கடலிலோ கலந்து அதனுடன் இறந்தவரை மறந்து விடுவர். மற்றவர்களுக்கு நன்மை ஏதும் செய்யாதவர்களுக்கு (இறப்பிற்கு பின்) ஏற்படும் நிலையை திரூமூலர் எடுத்துரைக்கிறார்.

No comments:

Post a Comment