அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக் கொடுண்மின் தலைப்பட்ட போதே.
- திருமூலர்
அடுத்தவரைப் பார்த்து வீண் பொறாமைக் கொண்டு அவரை அவதூறாகப் பேசாதீர்கள். தருமமற்ற வழியில் செல்லாதீர்கள். பெரும் கோபக்காரனாக மாறாதீர்கள். எந்நிலையிலும் அநியாய வழியில் பிறர் பொருளை அடைய நினைக்காதீர்கள். செல்வந்தனாக வாழ்வில் நீங்கள் உயர்ந்த நிலையில் இருக்கும்போது யாராவது பசி என்று உங்களிடம் கேட்டால் அவர்களுக்கு ஒரு கரண்டி (தவ்வி) உணவையாவது மனமுவந்து இடுங்கள்.
No comments:
Post a Comment