Friday, 10 August 2012

நியமத்தில் நிற்பவன்

தூய்மை அருளூண் சுருக்கம் பொறை செவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமி யீரைந்தும் நியமத்தனாமே
- திருமூலர்


நியமத்தில் நிற்பவனுக்கு அகம்-புறம் (1)தூயதன்மை, (2)அருள், (3)சுருங்கிய உணவு, (4)பொறுமை, (5)நேர்மை, (6)உண்மை, (7)உறுதியுடைமை ஆகியவற்றை வளர்த்தும், (8)காமம், (9)களவு, (10)கொலை என்னும் இத்தீயவைகளை ஒதுக்குவதும் திருமூலர் கூறும் பத்து விதிகளாகும்.

No comments:

Post a Comment