பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே
-திருமூலர்
தீய உணவான பிறிதோர் உயிரின் உடலை உண்ணும் கீழ்மக்களை எமன் தன் தூதுவர்களை அனுப்பி அத்தீயவர்கள் எங்கும் தப்பி ஓடாமல் இருப்பதற்காக அவர்களை நரகத்தில் தள்ளி வாட்டி வதைப்பான்.
No comments:
Post a Comment