உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே.
-திருமூலர்
மனமண்டலத்தில் பேரொளிப் பிழம்பாய் அவன் எழுகின்றான். ஒருபொழுதும் அதைவிட்டு அவன் நீங்குவதில்லை. ஆனால், அவனது இருப்பை நாம் உணர்ந்தோமில்லை. அவன் இன்ன தன்மையன் என்று அறியாமல் போகிறோம்.
No comments:
Post a Comment