Wednesday, 8 August 2012

திருநீற்று மகிமை

கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வீரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே
-திருமூலர்


எலும்பு மாலையை அணிந்த சிவன் பூசும் கவசத் திருநீற்றை அதன் ஒளியானது கெடாமல் பூசி மகிழ்ச்சி அடைவீர்கள் என்றால், முன் வினைகளும் தங்காது. சிவகதியும் உங்களை வந்தடையும். ஆனந்தமான சிவன் திருவடியை அடையலாம்.

No comments:

Post a Comment