சிவாயநம வெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ வென்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தமாமே
- திருமூலர்
‘சிவாய நம’ என்று உள்ளத்து வெளியே செல்லாது மனதை ஒருநிலை படுத்தி சொல்லி மலத்தால் ஆன துன்பத்தை நீக்கி, சிவத்துக்கு அடிமையாக்கி, ‘சிவாய சிவ சிவ’ என்று பலமுறை சித்தத்தில் எண்ணினால் அச்சம் நீங்க ஆனந்தம் உண்டாகும்.
No comments:
Post a Comment