சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தம் சிவமாகவே சித்தி முத்தியாம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.
-திருமூலர்
சித்தத்தில் இடையறாது சிவமந்திரம் ஓதி சிவமாகும் தன்மையர்க்கு வேறு எத்தவமும் செய்ய வேண்டியதில்லை. சித்தம் சிவமாகி பேரானந்தம் பொருந்திய அடியார்தம் உறவும் வாய்த்திடில் சித்தியும் உண்டு, முக்தியும் உண்டு. சிவனை எண்ணி சிவமாதலே தவத்தின் பயனாகும்.
No comments:
Post a Comment