ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனிஉண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்றவாறே.
-திருமூலர்
தாலி கட்டிய மனைவி இல்லத்தில் இனிதாய் இருக்கையில், வேறொருவர் மனைவியை விரும்பும் இளைஞர்கள் நன்கு பழுத்த பலாப்பழத்தை விட்டு முட்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும் ஈச்சம் பழத்துக்கு விருப்பபடுவதற்கு ஒப்பாகும்.
No comments:
Post a Comment