குருவழியாய குணங்களில் நின்று
கருவழியாய கணக்கை அறுக்க
வரும் வழிமாள மறுக்க வல்லார்கட்கு
அருள்வழி காட்டுவதுஞ் செழுத்தாமே
- திருமூலர்
ஒளி நெறியின் இயல்பை உணர்ந்து நின்று பிறவிகளுக்கு காரணமான வினைகளை ஒழிக்க, அப்பிறவி வரும் வழியைத் தடை செய்யும் திறன் உடையவர்க்கு அருள்நெறியைக் காட்டுவது ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்தாகும்.
No comments:
Post a Comment