Thursday, 9 August 2012

ஈசன் இருக்கும் இடம்

வானுக்கு ளீசனைத் தேடும் மருளர்காள்
தேனுக்கு ளின்பம் சிவப்போ கருப்போ
தேனுக்கு ளின்பம் சிறந்திருந் தாற்போல்
ஊனுக்குள்  ஈசன் ஒளிந்திருந் தானே.
-திருமூலர் 

வானத்துக்குள்ளே இறைவன் மறைந்துள்ளான் என்று தேடும் மூட மானிடர்களே! தேனுக்குள் இருக்கும் இனிமை சிவப்பு நிறமா அல்லது கருப்பு நிறமா என்று சொல்லுங்கள். கறுப்பும்,சிவப்பும் என் எந்த நிறமும் இல்லாத தேனின் சுவையைப் போலவே, நம் உடலிலே ஆன்மாவுடன் கலந்து இருக்கும் இறைவனும் இனிமையானவன். அவனை வானில் தேடாதீர்கள். உங்கள் ஊனில்(உடலில்) தேடுங்கள்.

சித்தர்கள் தங்கள் உடலில் உள்ள குண்டலினி சக்தியை படிப்படியாக மேலேற்றி இரண்டு புருவ மத்திக்குக் கொண்டு வருகிறார்கள். அகக் கண்களால் அங்கே இறைவனைக் காண்கின்றனர். இச்செயல் சித்தர்களுக்கு மட்டுமே கைவரக்கூடியது. இதனால்தான் திருமூலரும் 'ஊனுக்குள்  ஈசன் ஒளிந்திருந் தானே.' என்கிறார்.

No comments:

Post a Comment