வானுக்கு ளீசனைத் தேடும் மருளர்காள்
தேனுக்கு ளின்பம் சிவப்போ கருப்போ
தேனுக்கு ளின்பம் சிறந்திருந் தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந் தானே.
வானத்துக்குள்ளே இறைவன் மறைந்துள்ளான் என்று தேடும் மூட மானிடர்களே! தேனுக்குள் இருக்கும் இனிமை சிவப்பு நிறமா அல்லது கருப்பு நிறமா என்று சொல்லுங்கள். கறுப்பும்,சிவப்பும் என் எந்த நிறமும் இல்லாத தேனின் சுவையைப் போலவே, நம் உடலிலே ஆன்மாவுடன் கலந்து இருக்கும் இறைவனும் இனிமையானவன். அவனை வானில் தேடாதீர்கள். உங்கள் ஊனில்(உடலில்) தேடுங்கள்.
No comments:
Post a Comment