Thursday, 9 August 2012

தாச மார்க்கம்

எளிஅனல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளிதின் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பல் மஞ்சணம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.
- திருமூலர்

மக்கள் அனைவரும் எளிதாகச் செய்யும் திருவிளக்கு ஏற்றுதல், பூக்களைப் பறித்துவந்து இறைவனுக்குச் சூட்டுதல், இறைவன் உறையும் திருக்கோயிலை அன்புடன் சாணமிட்டு மெழுகுதல், கோயிலுக்குள்ளிருக்கும் குப்பைகளை அகற்றுதல், வாயார இறைவனின் திருநாமத்தைப் பாடிப் பரவுதல், பூஜை நேரங்களில் கோயில் மணியை ஒலித்து இறைவனை வணங்குதல், பல வகையான திருமஞ்சனம், அபிஷேகப் பொருள்களை சேகரித்தல், கோயில் திருப்பணிகளில் இறங்குதல் போன்றவை இறைவனுக்கு அடிமையாக (தாசனாக) இருந்து நாம் செய்ய வேண்டிய செயல்களாகும். இவ்வெளிய செயல்களை நாம்  அன்றாடம் செய்வதால் இறைவனை அடையலாம் என்பதாகும்.

இறைவனை சகமார்க்கம், சன்மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் என நான்கு வழிகளில் வழிபடலாம். இவற்றுள் திருமூலர் மேற்காணும் பாடலில் சொல்லியிருக்கும் மார்க்கமானது இறைவனுக்கு அடிமையாய் இருந்து செய்யும் தாசமார்க்கமாகும்.

No comments:

Post a Comment