Thursday, 9 August 2012

இல்லறத்தில் துறவறம்

பள்ளம் முத்நீர் பழகிய மீன் இனம்
வெள்ளம் புதியவை காண விருப்புறும்
கள்ளவர் கோதையர் காமனோடு ஆடினும்
உள்ளம் பிரியா ஒருவனைக் காணுமே
- திருமூலர்

ஆழமான நீர்நிலைகளில் இருந்து பழகிய தண்ணீருக்குள்ளேயே இருக்கின்ற மீன் இனங்கள் புதிதாக வந்த நீரிலே நீந்தித் திளைக்க விருப்பம் கொள்ளும். அதுபோல, இல்லற வாழ்வில் ஈடுபட்டு மங்கையுடன் கூடி இன்பமாக வாழ்ந்தாலும் உயர்ந்த குணமுடைய பெரியோர்களின் உள்ளமானது எப்பொழுதும் இறைவனிடம் கொண்ட பற்றை விடாது பற்றி இருக்கும்.

தாமரையின் தண்டு நீரில் மூழ்கி இருந்தாலும் அதன் இலையில் நீர் ஒட்டாதது போல, இல்லற வாழ்வில் திளைத்திருந்தாலும் ஆசாபாசங்களுக்கு ஆட்படாமல் வாழ இயலும். தன் மனைவி, மக்களுடன் இன்பமாய் வாழ்ந்து கொண்டே இறைவனடியார்களுக்குத் தொண்டு செய்து முக்தி அடைந்த ஞானிகள் - அப்பூதி அடிகளார், இளையான் குடிமாற நாயனார், தாயுமானவர்.

No comments:

Post a Comment