பள்ளம் முத்நீர் பழகிய மீன் இனம்
வெள்ளம் புதியவை காண விருப்புறும்
கள்ளவர் கோதையர் காமனோடு ஆடினும்
உள்ளம் பிரியா ஒருவனைக் காணுமே
ஆழமான நீர்நிலைகளில் இருந்து பழகிய தண்ணீருக்குள்ளேயே இருக்கின்ற மீன் இனங்கள் புதிதாக வந்த நீரிலே நீந்தித் திளைக்க விருப்பம் கொள்ளும். அதுபோல, இல்லற வாழ்வில் ஈடுபட்டு மங்கையுடன் கூடி இன்பமாக வாழ்ந்தாலும் உயர்ந்த குணமுடைய பெரியோர்களின் உள்ளமானது எப்பொழுதும் இறைவனிடம் கொண்ட பற்றை விடாது பற்றி இருக்கும்.
No comments:
Post a Comment